News December 23, 2025
விழுப்புரம்: 10 நாட்களாக மது குடித்தவருக்கு ஏற்பட்ட சோகம்!

விழுப்புரம்: நன்னாடு கிராமத்தைச் சேர்ந்த புஷ்பராஜ் (40), கடந்த 10 நாட்களாக வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டில் எந்த அசைவும் இன்றி இருந்துள்ளார். அதைக்கண்ட உறவினர்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 26, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
அதிமுக தேர்தல் அறிக்கை குழுவில் விழுப்புரம் மாவட்ட செயலாளர்

2026-தமிழ்நாட்டில் நடை பெற இருக்கும் சட்டசபை தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினை அமைத்து அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று (டிச.25) அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இக்குழுவில் விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகத்தை தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் உறுப்பினராக நியமித்து அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.


