News August 26, 2025
விழுப்புரம் விநாயகர் பற்றிய வரலாறு குறிப்பு

விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு அருகே ஆலகிராமம் உள்ளது, இங்குள்ள பழமை வாய்ந்த எமதண்டீஸ்வரர் கோயிலில் விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர்கள் வீரராகவன், மங்கையர்க்கரசி ஆகியோர் கடந்த 2015ம் ஆண்டு ஆய்வு செய்தனர். அப்போது அங்கிருந்த விநாயகர் சிற்பத்தில் வட்டெழுத்து கல்வெட்டு இருப்பது கண்டறியப்பட்டது. விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் இன்று (26) கூறியுள்ளார்.
Similar News
News August 26, 2025
விழுப்புரத்தில் மக்கள் நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் தேசிய அளவில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடக்க இருக்கிறது. செப்டம்பர் 13ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், செஞ்சி, திண்டிவனம், திருவெண்ணைநல்லூர், விக்கிரவாண்டி மற்றும் திருக்கோவிலூர் நீதிமன்ற வளாகங்களில் நடைபெற உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை நீதிபதி மணிமொழி கேட்டுகொண்டுள்ளார்.
News August 26, 2025
BREAKING: விழுப்புரம்- ஃபெஞ்சல் புயல் பாதிப்பு; ரூ.84 கோடி நிதி

கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம் மாவட்டம் தளவானூர் அணைக்கட்டு முற்றிலுமாக சேதமடைந்தது. அதனைத் தொடர்ந்து பல நாட்களாக விடாமல் கனமழை பெய்ததால், அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அந்த அணையை சீரமைக்க ரூ.84 கோடி ஒதிக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசனை வெளியிட்டுள்ளது.
News August 26, 2025
விழுப்புரம்: ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா…?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க<