News November 1, 2025
விழுப்புரம் : ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

விழுப்புரம் மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம்.தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
Similar News
News November 1, 2025
விழுப்புரம்: தறிகெட்டு ஓடிய பைக்; இருவர் கைது!

விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையம் காவலர்கள் நேற்று அக்.31 வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பாச்சனூர் பகுதியை சேர்ந்த ராமு கானையைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோர் தங்கள் பைக்கில் மக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக சென்றது தெரியவந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவரது வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
News November 1, 2025
விழுப்புரம்: குட்கா விற்ற இருவர் கைது

திண்டிவனம் நேற்று அக்.31 மாலை, ரோஷணை பாட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள செந்தில்ராஜ், என்பவரின் பங்க் கடையில் சோதனை நடத்தினர். அவரது கடையில் 500க்கு மேற்பட்ட பாக்கெட்டுகள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. பிடிபட்ட அவரிடம் விசாரித்த போது, திண்டிவனத்தை சேர்ந்த தட்சிணாமூர்த்தி, என்பவரிடமிருந்து குட்கா வாங்கியது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைதுசெய்தனர்.
News November 1, 2025
71 ஆயிரம் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம்

தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 71 ஆயிரம் பயனாளிகள் வீடுகளுக்கு வரும் 3, 4, 5 ஆகிய தினங்களில் பொதுவிநியோகம் செய்யப்படும் என ஆட்சியர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.


