News November 9, 2025
விழுப்புரம்: ரூ.4.12 கோடி சுருட்டிய அதிகாரிகள்.. போராட்டம் அறிவிப்பு

செஞ்சி வட்டம் சந்தியங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், 2016ஆம் ஆண்டு விவசாயிகளை ஏமாற்றி கூட்டுறவு அதிகாரிகள் ரூ.4.12 கோடியை சுருட்டி உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரும் உரிய நடவடிக்கை எடுக்கவும், 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், வரும் நவ.20ஆம் தேதி வயிற்றில் கருப்பு துணிகட்டி காத்திருக்கும் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 9, 2025
விழுப்புரம்: மாணவியிடம் போலீஸ் பாலியல் சீண்டல்

திண்டிவனம் – மரக்காணம் சாலையில் மாணவி தனியாக நடந்து வந்துள்ளார். அப்போது பிரம்மதேசம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வரும் தென்ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த இளங்கோ, மாணவியை நிறுத்தி, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்த புகாரில் இளங்கோவை ஆரோவில் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 9, 2025
விழுப்புரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

விழுப்புரம் சங்கமம் லயன்ஸ் சங்கம் மற்றும் சர்வீஸ் பவுண்டேஷன் இணைந்து 90வது இலவச கண்சிகிச்சை முகாமை நடத்துகிறது. இந்த முகாம் நாளை (09.11.2025) காலை 9.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தேசிய நெடுஞ்சாலை, கோயிலூரில் நடைபெறும். விழுப்புரம் மாவட்ட மக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம். முகாமில் கண் பரிசோதனை, அறுவை சிகிச்சை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படும்.
News November 8, 2025
FLASH: கோவையை தொடர்ந்து விழுப்புரத்தில் கொடூரம்

திண்டிவனம் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காவலர் இளங்கோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிற்கு தெரியாமல் ஆண் நண்பருடன் சென்னைக்கு சென்ற மாணவி, கடந்த 7ஆம் தேதி வீடு திரும்பி உள்ளார். அப்போது காவல் நிலையம் அழைத்து செல்வதாக கூறி பாழடைந்த வீட்டிற்கு சென்று அத்துமீறி உள்ளார். இதுகுறித்த உங்கள் கருத்துகளை கமெண்டில் ஷேர் பண்ணுங்க


