News May 29, 2024
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை நடத்தப்பட்ட சாராய ரெய்டுகளில் 8290 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 8362 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களிடமிருந்து 12 நான்கு சக்கர வாகனங்களும்,3 மூன்று சக்கர வாகனங்களும், 46 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2232 லிட்டர் கள்ள சாராயமும் 79,727 புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
Similar News
News August 22, 2025
விழுப்புரம் மக்களே எச்சரிக்கையாக இருங்க!!!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது. அதில், உங்கள் வாகனங்களை பார்க்கிங்க் இடத்தில் நிறுத்தப்படும் போது. அந்த வாகனத்தில் உள்ளே மதிப்புமிக்க பொருள்களையோ, பணத்தையோ வைக்க வேண்டாம். அவற்றை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் என விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது.
News August 22, 2025
விழுப்புரம்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விழுப்புரம் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17482315>>மேலும் அறிய<<>>
News August 22, 2025
தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை அறிவிப்பு.

விழுப்புரம்: கிராமங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வாராந்திர விடுமுறை அளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கிராமப்புறத் தூய்மைப் பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. இது சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.