News December 21, 2024
விழுப்புரம் மாவட்டத்துக்கு ரூ.1863.52 கோடி நிதி

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்துக்கு நிரந்தர சீரமைப்பு பணிகளுக்கு ரூ.1863.52 கோடி நிதி ஒதுக்கக்கோரி அரசுக்கு முன்மொழியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்து பாதிப்புகள் ஏற்பட்டன. தமிழக அரசு, முதலமைச்சர் நடவடிக்கையால், பெஞ்சல் புயல் பாதிப்பில் இருந்து விழுப்புரம் மாவட்டம் விரைந்து செயல்படும்.
Similar News
News March 6, 2026
விழுப்புரம்: உயிரை காக்க whatsapp-ல் ஒரு Hi போதும்!

விழுப்புரம் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையை இனி வாட்ஸ் ஆப் மூலமாக பெறும் பிரத்யேக வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் 94450 30725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance -ஐ தேர்வு செய்து (send Location) என்பதை கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் உடனே உங்களைத் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். *கண்டிப்பாக உதவும் மறக்காம ஷேர் பண்ணுங்க*
News March 6, 2026
பள்ளி மாணவர்களுக்கு ரத்த பரிசோதனை ஆட்சியர் ஆய்வு

திருவெண்ணெய்நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ்,பள்ளி மாணவிகளுக்கு இரத்த பரிசோதனை நடைபெற்றது. இதை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி முன்னிலையில் இன்று (மார்ச்.06) பார்வையிட்டார். உடன் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.சா.செந்தில்குமார் உட்பட பலர் இருந்தனர்.
News March 6, 2026
2025-2026 கீழ் மாணவர்கள் பயிலும் குடில்கள்

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2025-2026 கீழ் மாணவர்கள் பயிலும் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதை ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் முன்னிலையில் இன்று (மார்ச்.06) திறந்து வைத்தார்.


