News August 4, 2024
விழுப்புரம் மாவட்டத்திற்கு 2.10 கோடி ஒதுக்கீடு

மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், பேசிய விழுப்புரம் ஆட்சியர் பழனி, கடந்தாண்டு வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 274 பேருக்கு தீதருவித் தொகையாக 2 கோடியே 51 லட்சத்து 81 ஆயிரத்து 668 ரூபாய் வழங்கப்பட்டது. நிகழாண்டில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 2.10 கோடி தீதருவி தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
Similar News
News January 30, 2026
விழுப்புரம்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்
News January 30, 2026
விழுப்புரம்: பிப்.1-இல் மதுக்கடைகள் மூடல்

வள்ளலார் நினைவு நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விதிகளை மீறி மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியைப் பேணவும், வள்ளலார் கொள்கைகளுக்கு மதிப்பளிக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News January 30, 2026
விக்கரவண்டி அருகே அதிர்ச்சி!

விக்கிரவாண்டியை அடுத்த துறவி கிராமத்தைச் சேர்ந்த தையல் கலைஞர் வெற்றிவேல், நேற்று ராதாபுரம் வெட்டுக்காடு பகுதி திருமண மண்டபம் அருகே நடந்து சென்றபோது எதிர்பாராதவிதமாகத் திடீரென மயங்கி விழுந்தார். விழுந்த இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


