News January 15, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில், இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு உதவும், ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 1, 2026
விழுப்புரம்: தாய்மார்களுக்கு ரூ.11,000!

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) மூலம் கர்ப்பிணிகள் & பாலூட்டும் தாய்மார்களுக்கு மொத்தம் ரூ.11,000 உதவி வழங்கப்படுகிறது. முதல் குழந்தைக்கு ரூ.5,000 மற்றும் 2-வது பெண் குழந்தை என்றால் ரூ.6,000 இந்த திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க அருகிலுள்ள அரசு சுகாதார மையத்தை அணுகலாம். அல்லது இங்கே கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு 1515-ஐ அழைக்கவும். ஷேர் பண்ணுங்க.
News February 1, 2026
விழுப்புரம் அருகே அதிரடி கைது!

செஞ்சி ரோட்டில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. அதன் பெயரில் போலீசார் நேற்று (ஜன.31) பிற்பகல், செஞ்சி பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். இதில், அவர் 100 போதை மாத்திரைகள், 5 ஊசிகள் வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், செஞ்சி அடுத்த கப்பை கிராமத்தை சேர்ந்த அன்புச்செல்வன்,என தெரியவர அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
News February 1, 2026
விழுப்புரம் அருகே துணிகர திருட்டு!

தி.வெ.நல்லூர் அருகே டி. எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முகமது அலி இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். முகமது அலி மனைவி சைதாபீபீ தனது இரு மகளுடன் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்து 5 பவுன் நகை மற்றும் ரூ.11½ லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடு போனது. சம்பவ இடத்திற்கு வந்து திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வழக்கு பதிவு செய்தனர்.


