News September 28, 2025
விழுப்புரம்: மாயமான மூஞ்சி ஆறு

விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளார். அதில் ஆண்டுதோறும் செப்டம்பர் 4ம் ஞாயிற்றுக்கிழமை உலக ஆறுகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் ஆறுகள் மற்றும் நீர் வழித்தடங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், கிபி 1037ம் ஆண்டு சோழர் கால கல்வெட்டில் இடம்பெற்றுள்ள மூஞ்சி ஆற்றின் விவரங்களை வெளிக் கொணர வேண்டும் என ஆட்சியருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
Similar News
News February 2, 2026
திண்டிவனத்தில் அதிரடி கைது!

விழுப்புரம்: திண்டிவனம் ரோசனை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனை எதிரே உள்ள விளையாட்டு மைதானத்தில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர் . அப்போது அங்கு அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம், சங்கர், முருகன், பன்னீர்செல்வம், வாசுதேவன், செல்வராஜ், பாஸ்கரன் ஆகிய ஏழு பேரும் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், செல்போன் மற்றும் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
News February 2, 2026
விழுப்புரத்தில் துடிதுடித்து பலி!

விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் த.தமிழ்வாணன் (40), தனியாா் நிறுவனத்தில் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலைப் பாா்த்து வந்தாா். அய்யூர், அகரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து பால தடுப்புக் கட்டையில் மோதியதில், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News February 2, 2026
விழுப்புரத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

கடலூரைச் சேர்ந்தவர் ஜெசிப்பிரியா(22). இவருக்கும் விழுப்புரத்தைச் சேர்ந்த வசந்தராஜ்(25) என்பவருக்கும் கல்லூரியில் காதல் மலர்ந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இருவருக்குமிடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று(பிப்.1) மாலை, ஜெசிப்பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


