News September 6, 2025
விழுப்புரம்: மருத்துவமனைக்கு அமைக்க பூமி

விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனையில் புதிய மருத்துவப் பிரிவுகளுக்கான கூடுதல் கட்டடங்கள் கட்ட தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமணன் சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்று சிறப்பு நிதியில் ரூ.3.50 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடங்கள் கட்ட அரசு நிதி ஒதுக்கியது. நேற்று விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில் துறைசார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
Similar News
News September 6, 2025
விழுப்புரம்: 108 ஆம்புலன்ஸில் பணிபுரிய வாய்ப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், நாளை (செப்.7) மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
▶️ மருத்துவ பணியாளர்:
வயது: 19 – 30(இருபாலர்)
கல்வித்தகுதி: பி.எஸ்.சி. நர்சிங், லைஃப் சயின்ஸ்
மாத சம்பளம்: ரூ.21,320
▶️ ஓட்டுநர்:
வயது: 24 -34(ஆண்கள்)
கல்வித்தகுதி: 10-வது தேர்ச்சி
ஓட்டுநர் உரிமம்: இலகு ரகம், பேட்ச்
மாத சம்பளம்: ரூ.21,120
SHARE பண்ணுங்க
News September 6, 2025
விழுப்புரம் முற்றிலும் இலவசம்! SUPER NEWS

விழுப்புரம் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க இங்கே <
News September 6, 2025
விழுப்புரம்: பகுதிகளில் மின் நிறுத்தம் அறிவிப்பு

செஞ்சி அடுத்த தாண்டவசமுத்திரம் துணை மின் நிலையத்தின் சார்பில் பராமரிப்பு காரணமாக இன்று 06/09/2025 சனிக்கிழமை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் தடை காரணமாக தாண்டவசமுத்திரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான ஒதியத்தூர், சின்ன பொன்னாம்பூண்டி,தின்னலூர், சென்னாலூர், நாகம் பூண்டி ஆகிய பகுதிகளில் இன்று மின் நிறுத்தம் செய்யப்படுவதாக துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.