News March 18, 2024

விழுப்புரம்: மனுக்களை பெட்டியில் செலுத்தலாம்

image

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம், விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் உள்ளிட்ட அனைத்து முகாம்கள் மற்றும் கூட்டங்கள் எதுவும் நடைபெறாது என விழுப்புரம் ஆட்சியர் பழனி நேற்று அறிவித்தார். எனவே பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 8, 2025

திருவண்ணாமலை – விழுப்புரம் இடையே சிறப்பு ரெயில்

image

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்திற்கு சிறப்பு ரெயில் இயக்கம் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலத்திற்கு செல்வது வழக்கம். ஆகஸ்ட் மாத பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, பக்தர்களின் அதிக போக்குவரத்தை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 9-ஆம் தேதி (சனிக்கிழமை) விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே முன்பதிவில்லா சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

News August 8, 2025

மயிலம் தொகுதியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

image

மயிலம் தொகுதியில் நாளை (ஆக.9) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மயிலம் பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மனநலம், மூட்டுவலி, நரம்பியல் மருத்துவம், இருதய பரிசோதனை, மகப்பேறு மருத்துவம், பெண்களுக்கான கர்ப்பபை மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ஷேர் பண்ணுங்க

News August 8, 2025

திண்டிவனம்: மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை.

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 75 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 29 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 6) அதிகாலை மூதாட்டியின் வீட்டிற்குள் புகுந்த வாலிபர், மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். மூதாட்டி சத்தம் போடவே தப்பி ஓடியோள்ளார். போலீஸ் விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் பத்மநாபன் என்றும் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் தகவல்.

error: Content is protected !!