News December 18, 2025
விழுப்புரம்: மதுபோதையில் பெண்ணிடம் அத்துமீறல்!

விழுப்புரம் அருகே உள்ள கோனூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் மனைவி சுகந்தி (வயது 36). இவர் வீட்டில் தனியாக இருந்த போது, அதே கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் (38) என்பவர் மது போதையில் அத்துமீறி வீட்டிற்குள் சென்று, அவரை திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சுகந்தி கொடுத்த புகாரின்பேரில் ராமலிங்கத்தை காணை போலீசார் நேற்று கைது செய்தனர்.
Similar News
News December 23, 2025
விழுப்புரம் மக்களே – 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கவும். SHARE பண்ணுங்க!
News December 23, 2025
பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் அரையாண்டு விடுமுறை

நாளை முதல் மாணவர்களுக்கு 12 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 24-ந்தேதி முதல் ஜனவரி 4-ந்தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. விடுமுறை முடிந்து ஜனவரி 5-ந்தேதி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 23, 2025
விழுப்புரம்: 575 அரசு வேலை.. தேர்வே கிடையாது!

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் இங்கே <


