News January 4, 2026
விழுப்புரம்: மதுபாட்டில்கள் கடத்திய 2 பெண்கள் கைது!

விழுப்புரம்: புதிய பேருந்து நிலையத்தில், மேற்கு காவல் துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்குரிய கைப்பையுடன் வெளியே வந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, பையில் இருந்த 160 புதுச்சேரி மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த 2 பெண்களையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 24, 2026
விழுப்புரம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

விழுப்புரம் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது<
News January 24, 2026
விழுப்புரத்தில் அதிரடி கைது!

செஞ்சி சந்தைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவர் நேற்று முன்தினம் செஞ்சி காவல் நிலையத்திற்கு சென்று அங்கு பணியில் இருந்த ஏட்டு ஸ்ரீதரிடம் தனது வங்கி கணக்கை வங்கி நிர்வாகம் முடக்கி விட்டதாக கூறினார். மேலும், உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி ஸ்ரீதரை கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். அதனால் ஸ்ரீதர் உயர்அதிகாரியிடம் தெரிவிக்க செஞ்சி போலீசார் சிவகுமாரை கைது செய்தனர்.
News January 24, 2026
விழுப்புரம் கலெக்டர் அறிவித்தார்!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டமைப்பில் வரும் 30-ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார். இதில் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.


