News January 17, 2026

விழுப்புரம்: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

image

விழுப்புரம் மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News January 27, 2026

விழுப்புரம்: சரக்கு வாகனம் திருட்டு

image

விழுப்புரம் அருகே உள்ள லிங்கா ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ். இவர் பல்லியனெலினூர் ரயில்வே கேட் கீப்பராக வேலை செய்து வருகிறார். இவருடைய சரக்கு வாகனம் அங்கே நிறுத்தி பூட்டி விட்டு சென்றுள்ளார். மீண்டும் மறுநாள் வந்து பார்த்தபோது அந்த வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 27, 2026

விழுப்புரம்: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

image

விழுப்புரம் உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE IT

News January 27, 2026

விழுப்புரம்: சினிமா பாணியில் திருடனை மடக்கிய பொதுமக்கள்!

image

மணலூர்பேட்டை அருகே முருக்கம்பாடி கிராமத்தில், சாந்தி என்பவரின் வீட்டின் கதவை உடைத்து திருட முயன்ற மூவர் கும்பலை உரிமையாளர் கைகாட்டினார். சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள், பார்த்திபன் (25) என்ற இளைஞரைப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய அய்யப்பன் (19) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர். கைதான பார்த்திபனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!