News April 29, 2025
விழுப்புரம்: பெட்ரோல் குண்டு வீசிய வாலிபருக்கு குண்டாஸ்

விழுப்புரத்தில் மொபைல் சர்வீஸ் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று (ஏப்.28) கைது செய்யப்பட்டார். விழுப்புரத்தை சேர்ந்த அருண்குமார், கடந்த மார்ச் 28ம் தேதி விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள மொபைல் சர்வீஸ் கடையில் தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தார். டவுன் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று அவரை குண்டாஸில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News September 14, 2025
விழுப்புரம்: ஒரே நாளில் தீர்வு

விழுப்புரத்தில், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், தேசிய மக்கள் நீதி மன்றம், நேற்று(செப்.13) நடைபெற்றது. மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதல் தளத்தில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, ஐகோர்ட் நீதிபதி தண்டபாணி தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். இந்த மக்கள் நீதிமன்றத்தில், பல்வேறு வழக்குகளுக்கு, சுமூகமான முறையில் தீர்வு காண, நடவடிக்கை எடுக்கப்பட்டது.
News September 14, 2025
விழுப்புரம் :இரவு ரோந்து பணி விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப். 14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
விழுப்புரம்: திட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில், அனைத்து துறைகளுக்கு இடையேயான திட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம், இன்று (செப்.13) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கி. அரிதாஸ், திண்டிவனம் சார் ஆட்சியர் அ.ல. ஆகாஷ் உட்பட, துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.