News August 26, 2024

விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள மேம்பாலம் மூடல்

image

விழுப்புரம் – புதுச்சேரி சாலை ரயில்வே மேம்பாலம் 2 நாட்களுக்கு மூடப்படுகிறது. அதாவது ஆக.31 மற்றும் செப்.2 ஆகிய தேதிகளில் மூடப்படவுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேம்பாலம் மூடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே வழக்கமாக மேம்பாலத்தை பயன்படுத்தும் மக்கள் குறிப்பிட்ட தேதிகளில் மாற்று பாதைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது

Similar News

News December 21, 2025

விழுப்புரம்: சேலையில் தீ பற்றி இளம்பெண் பலி!

image

விழுப்புரம்: கழிக்குப்பத்தைச் சேர்ந்த சுசீலா, தனது மகன் சுமன், மகள் அனுசுயா (26) வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுசீலா மற்றும் சுமன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அனுசுயா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வாசலில் வைத்திருந்த விளக்கில் இருந்து அனுசுயா சேலையில் தீ பற்றியதில் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News December 21, 2025

விழுப்புரத்தில் பைக் – பஸ் மோதி கோர விபத்து!

image

விழுப்புரம்: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜானகிபுரம் மேம்பாலம் பகுதியில் நேற்று விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள் நிலை தடுமாறி பேருந்து மீது மோதியதில், மூவரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு உடனடியாக முண்டியம்பாக்கம் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 21, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!