News December 28, 2025

விழுப்புரம்: பாத்திர வியாபாரி வீட்டில் 5 பவுன் நகை கொள்ளை!

image

விழுப்புரம்: சு.கொள்ளூர் பகுதியில் வசித்து வருபவர் சத்தியராஜ் (30). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனது வீட்டை பூட்டி விட்டு பாத்திர வியாபாரத்திற்கு சென்றுவிட்டார். நேற்று திரும்பி வந்து பார்த்த போது தங்க மோதிரம், வளையல்கள், பிரேஸ்லெட் என 5 பவுன் நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளிப்பொருட்கள் திருட்டு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த வழக்கில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 29, 2025

விழுப்புரம்:உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க..

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்..உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு க்ளிக் செய்யுங்க…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க.. இந்த தகவலை SHARE பண்ணுங்க…

News December 29, 2025

விழுப்புரம்: நாளை இந்த பகுதிகளில் மின்தடை!

image

அரசூர், காரணைபெரிச்சானூர் துணை மின் நிலையத்தில் நாளை(டிச.30) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசூர், சேமங்கலம், பேரங்கியூர், தென்மங்கலம், ஆலங்குப்பம், குமாரபாளையம், இருவேல்பட்டு,கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், அரும்பட்டு போன்ற பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News December 29, 2025

விழுப்புரம்:தாய் சொன்ன வார்த்தையால் மகள் விபரீதம்!

image

விக்கிரவாண்டி அருகே உள்ள கீழக்கொண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், இவரது மகள் சுபாஸ்ரீ (17) சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.தற்போது, ​​அரையாண்டு விடுமுறை என்பதால் அவரது தாய் சாந்தி வீட்டு வேலை செய் என்று கூறியதால், மனமுடைந்த மாணவி சுபாஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!