News December 31, 2025
விழுப்புரம்: பஸ் டயரில் சிக்கி மூதாட்டி பலி!

மரக்காணம் அடுத்த கோமுட்டிச்சாவடி குப்பத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி மனைவி செந்தாமரை (70). இவர், அனுமந்தை இ.சி.ஆர்., ஓரத்தில் கொட்டகை அமைத்து மீன் விற்பனை செய்து வருகிறார்.நேற்று முன்தினம், புதுச்சேரியில் இருந்து மரக்காணம் நோக்கி வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து மீன் கடையில் புகுந்தது. இதில் செந்தாமரை பஸ்சின் முன்பக்க டயரில் சிக்கி இறந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 6, 2026
விழுப்புரத்தில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

விழுப்புரத்தில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <
News January 6, 2026
விழுப்புரம்: டிகிரி முடித்தால் SBI வங்கி வேலை! APPLY

விழுப்புரம் மாவட்ட மக்களே…, SBI வங்கியில் காலியாக உள்ள 55 சிறப்பு அலுவலர்களுக்கான காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் ஜன.10ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News January 6, 2026
விழுப்புரம்: அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு மாவட்டச் செயலாளர் மலர்விழி தலைமை தங்குகிறார். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்குவோம் என்ற முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதியை (315-ஜ) நிறைவேற்ற வலியுறுத்தி இந்த மாநிலம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


