News November 28, 2025

விழுப்புரம்: பகலில் நோட்டம் – இரவில் திருட்டு!

image

விழுப்புரம்: வேப்பேரியில் சந்தேகத்திற்குரிய 3 பேர் வீடு வாடகை எடுத்து தங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அங்கு சென்று விசாரித்த போலீசார், ரமேஷ்குமார், அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் வழக்கறிஞர் வடிவேல் ஆகியோரை கைது செய்தனர். பகல் நேரங்களில் புவனேஸ்வரி வீடு வீடாக சென்று நோட்டமிடுவதும், இரவு நேரங்களில் மற்ற இருவர் பூட்டை உடைத்து திருடியதும் தெரியவந்துள்ளது.

Similar News

News November 28, 2025

விழுப்புரம்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

image

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

விழுப்புரத்தில் இன்று மின்தடை

image

விழுப்புரத்தில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை விழுப்புரத்தில் பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கண்டம்பாக்கம், கண்டியமடை, மரகதபுரம் ஊழியர் நகர், கண்டமானடி, காவலர் குடியிருப்பு, பிடாகம். பி.குச்சிப்பாளையம், கோவிந்தபுரம், நெற்குணம், ஒருகோடி, எம்.ஜி.,புரம் ஆகிய பகுதிகளில் மின்தடை என அறிவிப்பு.

News November 28, 2025

2 நாட்களுக்குள் SIR படிவங்களை ஒப்படைக்க வேண்டும் – ஆட்சியர்

image

விழுப்புரத்தில் நேற்று வரை இப்பணிகள் 72 சதவீதம் முடிவடைந்துள்ளது. மீதமுள்ள வாக்காளர்கள் கணக்கீட்டு படிவம் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. மாவட்டத்தில் 28ம் தேதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனால், வாக்காளர்கள் 2 தினங்களுக்குள் கணக்கீட்டு படிவங்களை, தங்கள் பகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களிடம் விரைந்து ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!