News November 2, 2025

விழுப்புரம்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

விழுப்புரம் மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.

Similar News

News November 2, 2025

விழுப்புரம்: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 2, 2025

விழுப்புரம்: ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு!

image

பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க.

News November 2, 2025

விழுப்புரத்தில் வசமாக சிக்கிய குற்றவாளி!

image

சித்தேரிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (29). இவா் மீது விழுப்புரம் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றச் சரித்திரப் பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு வழக்கில் சாட்சியாக உள்ள சித்தேரிக்கரை பகுதியைச் சோ்ந்தவருக்கு பாலாஜி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து பாலாஜியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

error: Content is protected !!