News January 23, 2026
விழுப்புரம்: தீயில் உடல் கருகி பலி

விழுப்புரம் மகாத்மா காந்தி சாலையில் எலுமிச்சை பழ வியாபாரம் செய்து வந்த தனலட்சுமி (68), நேற்று வீட்டில் திடீரென மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். இதில் உடல் கருகி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார், உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 3, 2026
விழுப்புரத்தில் துணிகர சம்பவம்!

செஞ்சி அருகே ஆசிரியர் இளங்கோவன், நேற்று (பிப்.2) இரவு பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பும்போது மர்ம நபர்களால் அரிவாளால் தாக்கப்பட்டார். பொதுமக்கள் அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது இளங்கோவன் பெற்றது குறிப்பிடத்தக்கது.
News February 3, 2026
விழுப்புரத்தில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <
News February 3, 2026
விழுப்புரம்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க


