News January 11, 2026
விழுப்புரம்: தாயை தாக்கிய கொடூர மகன்!

வடநெற்குணத்தை சேர்ந்த காளியம்மாள் (77) தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது 2வது மகன் ரங்கநாதன் (44), அடிக்கடி மதுகுடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதேபோல் நேற்று முன்தினம் பணம் கேட்டபோது, காளியம்மாள் இல்லை எனக் கூறியதால், தாய் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காளியம்மாள் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர், ரங்கநாதனை நேற்று போலீசார் கைது செய்தனர்.
Similar News
News January 30, 2026
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (ஜன.30) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், துணை இயக்குநர் சுரேஷ் உட்பட பலர் உள்ளனர்.
News January 30, 2026
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், “போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், “போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஆட்டோவில் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன், உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
News January 30, 2026
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

(ஜன.30) மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உதவி ஆணையர் ராஜி தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணி விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போதை ஒழிப்பு குறித்து வாசகங்கள் அடங்கிய பதாகை ஏந்தியவாறு விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுப்பட்டனர்.


