News March 24, 2025
விழுப்புரம்: ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம்

விழுப்புரத்தில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் மாவட்ட அளவிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி திடலில் நடந்த போராட்டத்திற்கு, தமிழ் ஆசிரியர் கழகம் ஆறுமுகம் தலைமை தாங்கினார். முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில பொதுச் செயலாளர் சுந்தரமூர்த்தி, வணிகவரி பணியாளர் சங்க பொதுச்செயலாளர் டேனியல் ஜெயசிங், வருவாய்த்துறை அலுவலர் சங்க பொதுசெயலாளர் சங்கரலிங்கம், சிறப்புரையாற்றினர்.
Similar News
News March 26, 2025
விழுப்புரம் ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் சாலைப் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய ஆட்சியர் பேருந்துகளை சர்வீஸ் சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்ற, இறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். மேலும் விபத்துகளைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் உத்தரவிட்டார்.
News March 26, 2025
10வது பாஸ் போதும்; இலவச பயிற்சியுடன் வேலை

தமிழ்நாடு அரசு சார்பில், மருத்துவ துறை சார்ந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், முதியவர்களை பார்த்துக்கொள்ளும் வேலைவாய்ப்புகளை பெறலாம். 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பயிற்சி – 3 மாதம். இதற்கு வயது வரம்பு கிடையாது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தினை அணுகவும். ஷேர் பண்ணுங்க…
News March 26, 2025
முயல் வேட்டையின்போது துண்டான வாலிபர் விரல்

விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கியுடன் தென்பசார் காட்டுப் பகுதியில் முயல் வேட்டைக்கு சென்றார். துப்பாக்கியின் டிரிகர் பகுதி உடைந்திருப்பதை கவனிக்காமல் வெடிமருந்தினை லோடு செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக துப்பாக்கி வெடித்ததில் அஜித்குமாரின் கட்டை விரல் துண்டானது. அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.