News December 21, 2025
விழுப்புரம்: சேலையில் தீ பற்றி இளம்பெண் பலி!

விழுப்புரம்: கழிக்குப்பத்தைச் சேர்ந்த சுசீலா, தனது மகன் சுமன், மகள் அனுசுயா (26) வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சுசீலா மற்றும் சுமன் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், அனுசுயா வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, வாசலில் வைத்திருந்த விளக்கில் இருந்து அனுசுயா சேலையில் தீ பற்றியதில் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
Similar News
News December 25, 2025
விழுப்புரத்தில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு!

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (டிச. 26) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 25க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான 1000க்கும் மேற்பட்ட நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் இரு பாலரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
News December 25, 2025
விழுப்புரம்: சாப்பாடு பரிமாறிய நபருக்கு அடி உதை!

விழுப்புரம்: அய்யனம்பாளையத்தைச் சேர்ந்த அருள்குமார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி விழாவில் உணவு பரிமாறியுள்ளார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த லோகேஷ், ஸ்ரீமன் ஆகியோருடன் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், அவர்கள் 2 பேரும் சேர்ந்து தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அருள்குமார் போலீசார் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்தனர்.
News December 25, 2025
விழுப்புரம்: சரக்கு லாரி மோதி இளைஞர் துடிதுடித்து பலி!

விழுப்புரம்: மரக்காணம் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (22). இவர் நேற்று சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் கூனிமேடு அருகே பைக்கில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த சரக்கு லாரி மோதியதில், தனுஷ் நிகழ்விடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மரக்காணம் போலீஸாா், இறந்து போன தனுஷின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


