News October 28, 2025

விழுப்புரம்: சுகாதார ஆய்வாளர் எடுத்த விபரீத முடிவு

image

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த பெரியமுதலியார்சாவடி பாரதி நகரைச் சேர்ந்தவர் சரவணன் (38). விக்கிரவாண்டி பகுதியின் சுகாதார ஆய்வாளர் ஆவார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் ராஜலட்சுமி, சென்னைக்கு சென்ற நிலையில், சரவணன் தன் வீட்டில் மாலை 5:30 மணிக்கு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News October 28, 2025

விழுப்புரம்: 10க்கும் மேற்பட்டோருக்கு நாய் கடி!

image

விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திக்குப்பம் பகுதிகளில் இன்று (ஆக.28) 10க்கும் மேற்பட்ட முதியோர்களையும், பெண்களையும் தெரு நாய்கள் கடித்தன. இச்சம்பவத்தை பேரூராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் கண்டுகொள்ளாததால் பாதிக்கப்பட்டோர் வேதனையடைந்துள்ளனர். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

News October 28, 2025

விழுப்புரம்: ரோடு சரியில்லையா? புகார் அளிக்கலாம்

image

விழுப்புரம் மக்களே; உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பு இன்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க. அந்த சாலையை புகைப்படம் எடுத்து நம்ம சாலை செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க.

News October 28, 2025

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு!

image

விழுப்புரம்: வானூர் அருகே புதுக்குப்பம் ஏரிக்கரை ஆபத்தான நிலையில் உள்ளதால் சீரமைக்க வேண்டும் எனக் கோரி, விவசாயிகள் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா நடத்தினர். போலீசார் தடுத்ததால் அலுவலகம் முன் அமர்ந்து கோஷமிட்டனர். ஏரிக்கு 64 ஏரிகளின் உபரிநீர் வரும் நிலையில், கரை பணமின்றி உடையும் அபாயம் உள்ளதாக மனுவில் தெரிவித்தனர். டி.ஆர்.ஓ. அரிதாஸ் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னரே கலைந்தனர்.

error: Content is protected !!