News March 19, 2025

விழுப்புரம்: சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலை

image

விழுப்புரம் மாவட்டம் தென்கோடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன்( 22); இவர் 17 வயது சிறுமியை காதலித்து கடத்திச் சென்று, திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அர்ஜூனை போலீசார் தேடி வருகின்றனர்.

Similar News

News March 19, 2025

8th Pass போதும்! ரூ.14,970 சம்பளத்தில் அரசு வேலை…

image

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பியூன் பணியிடங்களுக்கு, தகுதியான பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து இதில் கொடுக்கப்பட்டிருக்கும் முகவரிக்கு மார்ச்.24க்குள் அனுப்ப வேண்டும். ஷேர் பண்ணுங்க

News March 19, 2025

போக்சோ வழக்கில் ஒருவர் கைது 

image

செஞ்சி அருகே வசிக்கும் 16 வயது சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அரசு மருத்துமனையில் சோதனை செய்ததில் சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்ததில், காட்டு சித்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த வினித்குமார் (23, பாலியல் வன்கொடுமை செய்தது தெரிவந்தது. புகாரின்பேரில் செஞ்சி அனைத்து மகளிர் காவல்துறையினர், வினித்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News March 18, 2025

விழுப்புரத்தில் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது

image

விழுப்புரத்தை சேர்ந்த காத்தமுத்து தனது தந்தை இறப்புச் சான்று பெறுவது தொடர்பாக மனு அளித்துள்ளார். இதற்காக நகராட்சி ஊழியர் மதன் பத்தாயிரம் லஞ்சம் கேட்ட போது விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்ததின் அடிப்படையில் அவர்களின் அறிவுரைப்படி இன்று(மார்.18) பாண்டியன் நகரில் உள்ள மதனுடைய இல்லத்தில் காத்தமுத்துவை வரவழைத்து பத்தாயிரம் லஞ்சமாக வாங்கிய போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!