News December 20, 2025
விழுப்புரம்: சிறுநீர் கழிக்க சென்றவர் துடிதுடித்து பலி!

விழுப்புரம்: பனப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் (26), இரவு நேரத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்காக அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அந்த நிலத்தில் சட்டத்தை மீறி காட்டுப்பன்றிகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இது குறித்த வழக்கில், மின்வேலி அமைத்த மதனை போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 20, 2025
விழுப்புரத்தில் கரண்ட் பில் குறைக்க EASY வழி!

விழுப்புரத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <
News December 20, 2025
விழுப்புரம்: விவசாயிகளுக்கு ரூ.31,500 மானியம்!

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.31,500 மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் நபர்கள் இங்கு <
News December 20, 2025
விழுப்புரத்தில் விஜய்க்கு பதிலடி கொடுத்த நயினார்!

சமீபத்தில் தவெக தலைவர் விஜய், ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜகவை விமர்சித்து பேசியிருந்தார். இந்த நிலையில் நேற்று விழுப்புரத்திற்கு வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “சிலர் வண்டியில் வந்து பாட்டு பாடுகிறார்கள். மாஸ் என்கிறார்கள், காசு என்கிறார்கள். ஆனால் நாங்க மிகப்பெரிய பிக்பாஸ் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என மறைமுகமாக சாடியுள்ளார்.


