News September 4, 2025
விழுப்புரம்: குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு

முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ.25,000 இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ.50.000 அரசு சார்பாக அவர்களின் பெயரில் ஒரு ரொக்கத்தொகை வரவு வைக்கப்படும். 18 வயதாகும் போது வட்டியுடன் சேர்த்து இந்த பணம் வழங்கப்படும். இதற்கு உங்கள் ஊரில் நடைபெற்று வரும் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாமிலும் விண்ணப்பிக்காலாம். ஷேர் IT <<17608117>>தொடர்ச்சி<<>>
Similar News
News November 19, 2025
விழுப்புரம்:விபத்தில் தந்தை மகள் உயிரிழப்பு!

வெங்கடேசன் தனது மோட்டார் சைக்கிளில் சூரியபிரியாவை நேற்று (நவ.18) காலையில் கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். செஞ்சி – விழுப்புரம் நெடுஞ்சாலையில், பூண்டி அருகே சென்றபோது எதிரே விழுப்புரத்திலிருந்து வந்த லாரி எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன், சூரியபிரியா ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த கஞ்சனூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை
News November 19, 2025
விழுப்புரம்:கதவை உடைத்து நகை திருட்டு!

வளவனூர் அடுத்த பனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் பெங்களூருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அடிக்கடி ஊருக்கு செல்வது வழக்கம் கடந்த நான்காம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றனர். நேற்று (நவ.18) வந்து பார்த்தபோது வீட்டில் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டது தெரியவந்தது.தொடர்ந்து வளவனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 19, 2025
இரவு நேர ரோந்துப் பணி: போலீசாரின் விவர செயல்பாடு!

விழுப்புரம் போலீசாரின் “Knights on Night Rounds” (நவ.18) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்..


