News September 16, 2025
விழுப்புரம்: குட்கா விற்பனை செய்த இருவர் கைது!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலைய போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவிலிருந்து குட்கா வாங்கி வந்து, விக்கிரவாண்டி சாலை பகுதியில் விற்பனை செய்த மளிகைக் கடை உரிமையாளர் சீனிவாசன் & சுரேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.30,000 மதிப்புள்ள 20 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நடவடிக்கையால் அப்பகுதியில் சட்டவிரோத குட்கா விற்பனை தடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 16, 2025
விழுப்புரம்: திருமண தடையா…? இங்கு போங்க!

விழுப்புரம் மாவட்டம் திரு.வி.க. சாலையில் அமைந்துள்ள பெரியநாயகி சமேத கயிலாசநாதர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. திருமண வரம் வேண்டுவோர், இங்குள்ள துர்க்கைக்கு 11 வாரம் நெய் விளக்கேற்றி, எலுமிச்சை மாலை அணிவித்தால் திருமணத்தடை நீங்கும். அதேபோல, தட்சிணாமூர்த்திக்கு நான்கு வாரம் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் விரும்பிய வரம் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஷேர் பண்ணுங்க
News September 16, 2025
விழுப்புரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (செப்.17) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
▶️JB திருமண மண்டபம், திண்டிவனம்
▶️ஊராட்சி ஒன்றிய பெண்கள் நடுநிலைப்பள்ளி வளாகம், அனந்தபுரம்
▶️அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், கந்தாடு
▶️KS திருமண மண்டபம், மணம்பூண்டி
▶️ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், நன்னாடு
▶️முருகன் திருமண மண்டபம், இரும்பை
ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
News September 16, 2025
விழுப்புரம்: ஆதார் கார்டில் இதை செய்து விட்டீர்களா?

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், <