News October 22, 2025

விழுப்புரம் காவல்துறை இளைஞர்கள் தன்னார்வலர்களுக்கு வேண்டுகோள்

image

வடகிழக்கு பருவமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இளைஞர்கள், தன்னார்வலர்கள் பழைய கட்டிடங்கள், தாழ்வான பகுதிகள் , ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளை ஒட்டி வசிப்பவர்களின் பாதுகாப்பு கருதி காவல்துறைக்கு தகவல் அளிப்பதோடு, தற்காலிக பாதுகாப்பு முகாம்களில் தங்குவதற்கு உதவுமாறு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கேட்டுக் கொள்ளப்படுகிறது. அவசர உதவிக்கு 1077,04146-223265,9498100485.

Similar News

News October 22, 2025

விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

விழுப்புரத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர் மழையின் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (அக்.22) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், தேவையிற்றி வெளியே செல்வதை தவிர்த்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News October 22, 2025

விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்

image

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கவும். TNSDMA. இன்று அதிகாலை முதலே விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர் .

News October 22, 2025

விழுப்புரம் பாண்டியன் நகர் வடிகால் ஆட்சியார் ஆய்வு

image

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில் உள்ள மழைநீர் வெளியேற்றும் வடிகால் வாய்க்காலை இன்று (அக்.21) மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மழை காரணமாக நீர் தேக்கம் ஏற்படாத வகையில் வடிகால் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறதா என்பதை ஆய்வு செய்தனர்.. பொதுமக்கள் தேவைகள் பற்றியும் அதிகாரிகள் தகவல் பெற்றனர்.

error: Content is protected !!