News January 29, 2026
விழுப்புரம்: காதல் மனைவிக்கு கொடுமை!

திருவெண்ணெய்நல்லூர் தாலுகா, டி.எடப்பாளையத்தைச் சேர்ந்தபர் முகமது ஆரிப். இவரது மனைவி ஆரிபா(28). இவர்கள் இருவரும் காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், இவர், தனது பெற்றோருடன் சேர்ந்து காதல் மனைவியைக் கொடுமைப்படுத்தியதாகவும், 2ஆவது திருமணம் செய்ய முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து ஆரிபா அளித்த புகாரின் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Similar News
News February 8, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 7) இரவு முதல் இன்று (பிப். 8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 8, 2026
விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (பிப். 7) இரவு முதல் இன்று (பிப். 8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News February 7, 2026
விழுப்புரம்: மகன் கண்டித்ததால் தந்தை தற்கொலை!

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், வண்ணான்குட்டைத் தெருவைச் சேர்ந்தவர் ரா.வேலு. மது அருந்தும் பழக்கம் உடைய இவர் தினமும் வீட்டுக்கு மது அருந்திச் சென்றாராம். இதை அவரது மகன் ஆதவன் கண்டித்துள்ளார். மகன் கண்டித்ததால் கோபித்துக் கொண்ட வேலு, வெள்ளிக்கிழமை காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுக்கொண்டார். பின், விழுப்புரம் நகர காவல் நிலையம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.


