News December 24, 2025
விழுப்புரம்: கஞ்சா விற்ற வட மாநிலத்தவர்கள் கைது!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரோமா கார்டன் அருகே நேற்று, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ரிபான்ஸ்க் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகாதேவ் குமார் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் நேற்று இரண்டு போரையும் கையும் களவுமாக கைது செய்து, அவர்களிடம் இருந்து 2.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Similar News
News December 28, 2025
விழுப்புரம்: ஹோட்டலில் தரமற்ற உணவா?

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக சில முக்கிய உணவகத்தில் இதுபோன்ற குற்றசாட்டுகள் எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதுபோன்ற பயனுள்ள தகவல்களை ஷேர் பண்ணுங்க!
News December 28, 2025
விழுப்புரம்:ரூ.5 லட்சம் காப்பீடு வேண்டுமா?

விழுப்புரம் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும்<
News December 28, 2025
விழுப்புரம் மாவட்டத்தில் ஐந்தாவது மாவட்ட கராத்தே போட்டி

விழுப்புரம் மாவட்டத்தில் ஸ்போர்ட்ஸ் கராத்தே-டூ அசோசியேஷன் சார்பில்
5-வது மாவட்ட கராத்தே போட்டி இன்று (டிச.28) காலை நடைபெற்றது. இந்தப் போட்டி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
போட்டியில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இளம் மற்றும் மூத்த கராத்தே வீரர்கள் பங்கேற்கின்றனர்.


