News December 24, 2025
விழுப்புரம்: கஞ்சா விற்ற வட மாநிலத்தவர்கள் கைது!

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆரோமா கார்டன் அருகே நேற்று, மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ரிபான்ஸ்க் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மகாதேவ் குமார் ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் நேற்று இரண்டு போரையும் கையும் களவுமாக கைது செய்து, அவர்களிடம் இருந்து 2.3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Similar News
News January 30, 2026
விழுப்புரம்: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 30, 2026
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் இன்று (ஜன.30) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கி.அரிதாஸ், வேளாண் இணை இயக்குநர் சீனிவாசன், துணை இயக்குநர் சுரேஷ் உட்பட பலர் உள்ளனர்.
News January 30, 2026
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், “போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், “போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு” விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஆட்டோவில் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினகரன், உதவி காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தாஆகியோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.


