News November 1, 2025

விழுப்புரம்: கஞ்சா விற்று வாலிபர் கைது

image

விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டிவனம் போலீசார் சஞ்சீவி ராயப்பேட்டை ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அபினேஷ் என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது அவரை கைது செய்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News

News November 1, 2025

71 ஆயிரம் வீடுகளுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம்

image

தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் 71 ஆயிரம் பயனாளிகள் வீடுகளுக்கு வரும் 3, 4, 5 ஆகிய தினங்களில் பொதுவிநியோகம் செய்யப்படும் என ஆட்சியர் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

News November 1, 2025

விழுப்புரம்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

image

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <>இங்கே கிளிக் <<>>செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்

News November 1, 2025

விழுப்புரம்: ஆட்சியர் வழங்கிய அறிவுரை

image

மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியர் அப்துல் ரகுமான் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளிலும் தீவிர திருத்த பணி தொடர்பாக பணிகள் நடைபெற உள்ளது இந்த நிலையில் அலுவலர்களுக்கு வாக்காளர்களை அலைகழிக்க கூடாது என ஆட்சியர் அறிவுரை வழங்கினார். மேற்கண்ட பணிகள் வரும் நாலாம் தேதி முதல் அடுத்த மாதம் நாலாம் தேதி வரை நடைபெற உள்ளது.

error: Content is protected !!