News May 27, 2024

விழுப்புரம்: ஏரி வயலை கொளுத்திய மர்ம நபர்கள்

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஜக்கம்பட்டி கிராமத்தில் நேற்று (மே 26) ஏரி வயல் பயிர்களை மர்ம நபர்கள் எரித்து அட்டகாசம் செய்துள்ளனர். பொதுமக்கள் தகவல் அளித்ததின் பெயரில் திண்டிவனம் தீயணைப்புத் துறையினர் மிகுந்த சிரமத்திற்கு இடையே போராடி ஏரியில் தீப்பற்றி இருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து மயிலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News August 22, 2025

விழுப்புரம் மக்களே எச்சரிக்கையாக இருங்க!!!

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது. அதில், உங்கள் வாகனங்களை பார்க்கிங்க் இடத்தில் நிறுத்தப்படும் போது. அந்த வாகனத்தில் உள்ளே மதிப்புமிக்க பொருள்களையோ, பணத்தையோ வைக்க வேண்டாம். அவற்றை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் என விழிப்புணர்வு பதிவு பதிவிடப்பட்டுள்ளது.

News August 22, 2025

விழுப்புரம்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

விழுப்புரம் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17482315>>மேலும் அறிய<<>>

News August 22, 2025

தூய்மைப் பணியாளர்களுக்கு வார விடுமுறை அறிவிப்பு.

image

விழுப்புரம்: கிராமங்களில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு வாராந்திர விடுமுறை அளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கிராமப்புறத் தூய்மைப் பணியாளர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. இது சுழற்சி முறையில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!