News October 2, 2025

விழுப்புரம்: உழவர் நல சேவை மையம் அமைக்க அழைப்பு

image

தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.3 லட்சம் முதல் 6 லட்சம் வரை மானியத்துடன் முதல்வரின் உழவர் நல வாரிய சேவை மையம் அமைக்க விண்ணபிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தோட்டக்கலை, வேளாண்மை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் வழங்குதல் போன்றவை இதன் மூலம் வழங்கப்படும். தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

Similar News

News October 3, 2025

விழுப்புரம்: கள்ளச்சந்தையில் மது விற்ற 26 பேர் கைது

image

விழுப்புரம் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி கள்ளச்சந்தையில் மது விற்ற 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 584 மது பாட்டில்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் 17 குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

News October 3, 2025

விழுப்புரம்: வங்க கடலில் புயல் சின்னம்! மழைக்கு வாய்ப்பு

image

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இதனால் இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளியில் செல்பவர்கள் மழை வாய்ப்பு இருப்பதால் குடை எடுத்துட்டு போக மறக்காதீங்க!

News October 3, 2025

விழுப்புரத்தில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வருகின்ற 5/10/2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை செஞ்சி காந்தி பஜார் சாலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் உதவியுடன் பாரத் மித்ரன் சமூக பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாமில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!