News October 24, 2025

விழுப்புரம் இளைஞர்களுக்கு GOOD NEWS

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.10.2025 முதல் தொடங்கும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என மாவட்ட ஆட்சியர் எஸ்.ஷீக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 24, 2025

விழுப்புரம்: பணிகளை ஆய்வு செய்த செஞ்சி மஸ்தான்

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அதனை இன்று (ஆக.24) செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டனர். உடன் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் மற்றும் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

News October 24, 2025

விழுப்புரம்: வாக்காளர் அட்டையை ஆன்லைனில் பெறலாம்

image

விழுப்புரம் வாசிகளே, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின்<> அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் <<>>சென்று முதலில் மொபைல் எண்ணை பதிவிட்டு புதிதாக ரெஜிஸ்டர் செய்து, பின்னர் லாகின் செய்யுங்கள். பின்னர், ‘Fill Form 6’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது அனைத்து விவரங்களையும் கொடுங்கள். அப்புறம் என்ன, 15 நாளுக்குள் உங்களுக்கு வாக்காளர் அட்டை வீடு தேடி வரும். ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

விழுப்புரத்திற்கு பெருமை சேர்த்த கபடி வீராங்கனை

image

பஹ்ரைன் நாட்டில் நேற்று (அக்.23) இரவு நடந்த U-18 மகளிர் இறுதிப் போட்டியில் இந்திய கபடி அணி ஈரான் அணியை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. இதில் விழுப்புரம் நகரம் கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த இளம் கபடி வீராங்கனை கார்த்திகா துணை கேப்டனாக பங்கேற்று சாதித்துள்ளார். இந்த வெற்றி விழுப்புரம் மாவட்ட மக்களுக்கு பெருமையையும், இளம் வீரர்களுக்கு உந்து சக்தியாகவும் அமைந்துள்ளது.

error: Content is protected !!