News December 15, 2025
விழுப்புரம்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
Similar News
News December 18, 2025
செஞ்சியில் சாலையோர பள்ளத்தில் இறங்கிய காரால் பரபரப்பு!

செஞ்சி சிங்கவரம் சாலையில் இன்று (டிச.18) மேல்மலையனூர் நோக்கிச் சென்ற சொகுசு கார் சாலையோர கால்வாயில் இறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் சாலையோர கால்வாயில் தடுப்பு சுவர் அமைக்காததால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இந்த நிலையில், காரில் பயணம் செய்தவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
News December 18, 2025
விழுப்புரம்:மருத்துவக் கல்வி இயுக்குனரகம் 75வது வைரவிழா!

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் மருத்துவ கல்வி இயக்குனரகம் 75வது வைரவிழா கொண்டாட்டம் நடந்தது. முண்டியம்பாக்கத்திலுள்ள மருத்துவ கல்லுாரி கலை அரங்கில் நடந்த விழாவிற்கு கல்லுாரி டீன் லுாசி நிர்மல் மெடோனா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசினார். மருத்துவ கல்வி இயக்குனரகம் துவங்கி 75 ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு பிரயாக் –25 என்ற கலாச்சார திருவிழா நடைபெற்றது.
News December 18, 2025
விழுப்புரம்: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


