News November 1, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் அக்.31 இரவு முதல் நவ.1 காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News November 1, 2025

விழுப்புரம்: கஞ்சா விற்று வாலிபர் கைது

image

விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டிவனம் போலீசார் சஞ்சீவி ராயப்பேட்டை ரோந்து சென்றனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அபினேஷ் என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது அவரை கைது செய்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

News November 1, 2025

விழுப்புரம்: வீடு தேடி ரேஷன் – ஆட்சியர் தகவல்

image

விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, நவ. 3, 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் அவர்களது இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படும்.

News October 31, 2025

விழுப்புரம் – சென்னை மெமு ரயில் சேவை மாற்றம்

image

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் யார்டில் பணிகள் நடக்க உள்ளதால் தாம்பரம் – விழுப்புரத்திற்கு நவ.1, 2 ஆகிய தேதிகளில் காலை 9:45 மணிக்கு இயக்கப்படும் மெமு பாசஞ்சர் ரயில் திண்டிவனம் – விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழுப்புரம் – சென்னை கடற்கரைக்கு நவ-1, 2 ஆகிய தேதிகளில் மதியம் 1:40 மணிக்கு புறப்படும் மெமு பாசஞ்சர் ரயில் விழுப்புரம்- திண்டிவனம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!