News October 25, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(அக்.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News October 26, 2025

விழுப்புரம்: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

image

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993-இல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் <>விண்ணப்பிக்கலாம்.<<>>

News October 26, 2025

விழுப்புரத்தில் ஏற்றுமதி குறித்த கருத்தரங்கு: ஆட்சியர் தகவல்

image

விழுப்புரத்தில் ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் வழிமுறைகள் குறித்த கருத்தரங்கு அக்.28ஆம் தேதி காலை 10 மணிக்கு விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாலம்மாள் வணிக வளாகத்தில் நடைபெறவுள்ளது. இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு 8925534035/9443728015 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

News October 25, 2025

கார் மோதி விபத்து – ஒருவர் பலி; இருவர் படுகாயம்

image

விழுப்புரம் அருகே எல்லீஸ்சத்திரம் பகுதியில் உள்ள சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அக்.25 மாலை கார் மோதிய விபத்தில், விழுப்புரம் அடுத்த வேலியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திமுக கிளை கழகச் செயலாளர் ராமதாஸ் என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து விழுப்புரம் தாலூகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!