News February 25, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் இன்று பிப்-(24) இரவு 10 மணி முதல் பிப்- (25) காலை 6 மணி வரை ரோந்து நடவடிக்கை
மேற் கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சந்தேக நபர்கள் குறித்து தகவல் அளிக்க போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்
Similar News
News February 27, 2026
விழுப்புரம்: யாருடன் கூட்டணி? ராமதாஸ் சூசகம்!

திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக ராமதாஸ் செய்தியாளர்களை சந்திருத்திருந்தார். அப்போது பேசிய அவர், ” நாளை (பிப்.28) கூட்டணி குறித்த முடிவை அறிவிப்போம். அது திராவிட கட்சிகளாக கூட இருக்கலாம். நாங்கள் பயணிக்க உள்ள தேர்தல் வாகனம் குறித்து நாளை உங்களுக்கு தெரியவரும்” எனக் கூறியுள்ளார்.
News February 27, 2026
திண்டிவனம்: கோயிலின் பின்புறம் கிடந்த சடலத்தால் பரபரப்பு!

திண்டிவனம் ஜக்காம்பேட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழித்துணை அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறம் நேற்று 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மயிலம் போலீசார், மர்ம முறையில் இறந்து கிடந்த அந்த முதியவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News February 27, 2026
விழுப்புரத்தில் பெண் பரிதாப பலி!

திருவெண்ணெய்நல்லூா் பகுதியைச் சோ்ந்தவர் விஜயலட்சுமி (46). சற்று மனநலன் பாதிக்கப்பட்ட இவா், மருத்துவரின் ஆலோசனையின்படி மாத்திரைகளை உட்கொண்டு வந்தாா். இந்நிலையில், கடந்த 23ம் தேதி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்டு விஜயலட்சுமி மயங்கியுள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


