News January 5, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் (ஜன.04) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News January 7, 2026
விழுப்புரத்தில் மின்தடை – இதில் உங்க ஏரியா இருக்கா?

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி மற்றும் தாயனூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.8) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், மேல்மலையனூர், தாயனூர், தேவனூர், வளத்தி, அன்னமங்கலம், விக்கிரவாண்டி, சுங்கச்சாவடி, முண்டியம்பாக்கம், சின்னதச்சூர், பாரதிநகர், பனப்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
News January 7, 2026
விழுப்புரத்தில் பரபரப்பு – குளத்தில் மிதந்த சடலம்!

விழுப்புரம்: புளிச்சப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் அகமத் கான். இவர் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அகமத் கான் காணாமல் போனார். அதைத்தொடர்ந்து அவரது மகள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் வீட்டின் அருகேயுள்ள குளத்தில் சந்தேகத்தின் பேரில் தீயணைப்பு வீரர்கள் தேடினர். அப்போது அகமத் கான் சடலமாக கிடைத்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 7, 2026
விழுப்புரம்: மூதாட்டியை கொடூரமாக தாக்கிய பெண்கள்!

விழுப்புரம்: நாகல்பாக்கத்தைச் சேர்ந்தவர் குப்பு (60). இவர் தனது வீட்டின் அருகே குப்பையை தீ வைத்து எரித்துள்ளார். அப்போது அருகில் வசிக்கும் முத்துலட்சுமி மற்றும் பரிமளா ஆகிய 2 பேரும் குப்புவை தகாத வார்த்தைகளால் திட்டி கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


