News August 9, 2025

விழுப்புரம்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (ஆக.09) இரவு 10:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவல் அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம் அல்லது 100 அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 10, 2025

விழுப்புரத்தில் இன்று மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் அவலூர்பேட்டை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இன்று (ஆக.10) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அவலூர்பேட்டை ஊராட்சி மன்றம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. சுற்றுப் பகுதியில் உள்ள பொதுமக்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 10, 2025

காவல்துறை சார்பாக போதைப்பொருட்கள் விழிப்புணர்வு

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பாக இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் இ.கா.ப., உத்தரவின் பேரில் காவலர்கள் போதைப்பொருட்கள் சம்மந்தமாக விழிப்புணர்வு செய்யப்பட்டது.ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News August 10, 2025

பல்லவர் கால கொற்றவை மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுப்பு

image

திண்டிவனம் அடுத்த மொளசூரில் 5 அடி உயரமுள்ள பலகை கல்லில் செதுக்கப்பட்ட பல்லவர் கால 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பமும், செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் சுமார் 3அடி உயரம் உள்ள பலகை கல்லில் அமர்ந்த நிலையில் 9ம் நூற்றாண்டு சேர்ந்த பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்ததேவி சிற்பமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்

error: Content is protected !!