News December 20, 2024
விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு

கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவை ஒட்டி விருதுநகரில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வினாடி வினா போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வு செய்யும் போட்டி டிசம்பர் 21 (நாளை) நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் விருப்ப மனுவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இன்று மாலைக்குள் வழங்க வேண்டும் என ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
விழுப்புரம்: புதிய யுக்தியை கையில் எடுத்த தவெக-வினர்!

திண்டிவனத்தில் தவெக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் மண்டல இணை கண்காணிப்பாளர் அன்பரசன் கலந்து கொண்டு, ”ஒவ்வொரு கிராமம் கிராமமாக சென்று பொதுமக்களின் பிரச்சனைகளை கண்டறிந்து, களத்தில் இறங்கி செயல்பட்டு அதனை தீர்க்க வேண்டும். இதனை ஒவ்வொரு நிர்வாகியும் முறையாக செய்தால் விஜய்யை முதலமைச்சராக்க முடியும்” என கூறியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்!
News March 3, 2026
விழுப்புரத்தில் கார் மோதி பரிதாப பலி!

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கருவேப்பிலை பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவன் (73); இவர், நேற்று முன்தினம் பண்ருட்டி-மடப்பட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற கார், கேசவன் மீது அதிவேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த கேசவன், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் இறந்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News March 3, 2026
விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டம் காவல்துறை சார்பில் நேற்று ( மார்ச் 02) இரவு 10 மணி முதல் (மார்ச் 03) காலை 6:00 மணி வரை ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி,கோட்டகுப்பம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்கு நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என காவல்துறை அறிவித்துள்ளது.


