News February 25, 2026

விழுப்புரம்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <>கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News February 25, 2026

விழுப்புரம்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

விழுப்புரம் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். விழுப்புரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News February 25, 2026

விக்கிரவாண்டியில் விஷம் குடித்து தற்கொலை!

image

விக்கிரவாண்டி: கல்யாணம்பூண்டியை சேர்ந்தவர் யுவராஜ் (42). திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த அவர், நேற்று முன்தினம் பூச்சிமருந்தை எடுத்து குடித்துவிட்டார். அவரை மயங்கிய நிலையில், அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கஞ்சனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News February 25, 2026

விழுப்புரம்: தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்த சிறுவன்!

image

மயிலம்: சின்ன நெற்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மகன் குருஷித் (9). இவர் நேற்று முன்தினம் காணாமல் போனதால் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அக்கம்பக்கத்தில் தேடிய நிலையில், நேற்று வீட்டின் அருகே புதிதாகக் கட்டப்பட்டு வரும் தண்ணீர் தொட்டியில் சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டான். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை கிளம்பியுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!