News April 30, 2025
விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம் வி.மருதுார் காளியம்மன் கோவில் அருகில், ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைபொருள் பிரிவிற்கு தகவல் கிடைத்தது. தனி தாசில்தார் ஆனந்தன் மற்றும் ஆர்.ஐ.,க்கள் கண்ணன், லட்சுமிநாராயணன்,சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். 25 மூட்டைகளில்,1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக குடோனிற்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News September 22, 2025
விழுப்புரம்: உயிர் நண்பனை கழுத்தறுத்து கொன்ற இருவர் கைது

பண்ருட்டி அருகே கார்த்திகேயன் என்பவர் தனது 2 நண்பர்களோடு மது அருந்தும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 2நண்பர்கள் சேர்ந்து கார்த்திகேயனை கழுத்தை அறுத்துக்கொன்று குளத்தில் வீசியுள்ளனர். கார்த்திகேயன் வீடு திரும்பாத நிலையில் 3 நாள் கழித்து சொக்கநாதர் குளத்தில் இருந்து அழுகிய நிலையில் 18ஆம் தேதி அவரின் உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் 2 நண்பர்களையும் போலீசார் இன்று கைது செய்தனர்.
News September 22, 2025
விழுப்புரம்: நவராத்திரியில் இதை பண்ணுங்க!

நவராத்திரி வழிபாட்டை கொலு, கலசம், படம், அகண்ட தீபம் என 4 வழிகளில் மேற்கொள்ளலாம். கொலுவில், படிகளை 3, 5, 7, 9, 11 என ஒற்றைப்படையில், கிழக்கு/வடக்கு திசையில் அமைக்க வேண்டும். பொம்மைகளை பரிணாம வளர்ச்சிப்படி (முதல் படி ஓரறிவு,6ஆம் படி மனிதர்கள், 9ஆம் படி தேவியர்/கலசம்) 9ஆம் படியில் முப்பெரும் தேவியரும், கலசமும் வைப்பது அவசியம். விழுப்புரம் மேல்மலையனுர் அம்மன் கோயிலில் வழிபடுவது மிகவும் நல்லது.ஷேர்
News September 22, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் செப்.21 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.