News April 22, 2025
விழுப்புரம் அருகே ஆற்று மணல் கடத்தல்: வாகனங்கள் பறிமுதல்

மரகதபுரம் பகுதியில் தென்பெண்ணையாற்றில் கனரக வாகனங்கள் மூலம் மணல் கடத்தல் நடைபெறுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. விழுப்புரம் தாலுகா போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனா். அங்கு கனரக வாகனங்கள் மூலம் ஆற்று மணல் கடத்தப்படுவது தெரியவந்தது. மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 டிராக்டா்கள், ஒரு பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News November 14, 2025
திண்டிவனம் துணை மின் நிலையத்தில் மின் தடை

திண்டிவனம் துணை மின் நிலையத்தில் நாளை(நவ.15) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திண்டிவனம், அய்யந்தோப்பு, உப்புவேலூர், கிளியனூர், சாரம், மொளச்சூர், கீழ்சித்தாமூர், எண்டியூர், தென்பசார், சலவாதி, செஞ்சி & மயிலம் சாலை போன்ற பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 14, 2025
விழுப்புரம் பகுதிகளில் நாளை மின்தடை

விழுப்புரம் துணை மின் நிலையத்தில்(110/22KV) நாளை(நவ.15) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை & திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, மகாராஜபுரம், ஜானகிபுரம், பொய்யப்பாக்கம், நன்னாடு, பிடாகம் போன்ற பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சிக்கு <<18281615>>இங்கே <<>>கிளிக்.
News November 14, 2025
விழுப்புரத்தில் விஷம் அருந்தி தற்கொலை!

விழுப்புரம்: செஞ்சி தாலுகா சென்னாலூரைச் சேர்ந்தவர் ரங்கநாதன்(70). இவர், நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆபத்தான நிலையில் மீட்டு, செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


