News September 27, 2025
விழுப்புரம் : அரசு பள்ளி அருகே குட்கா; ஒருவர் கைது

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் கையில் குட்கா பாக்கெட்டுகளுடன் நின்றிருந்த புத்தனந்தல் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய காவல்துறையினர், நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 31, 2026
விழுப்புரம்: ரயில்வேயில் 22195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

விழுப்புரம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <
News January 31, 2026
விழுப்புரம்: திருமண தடை நீங்க இங்கு போங்க!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேலக்கொண்டூரில் பட்டாபிராமர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில் 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோயில் வந்து பெருமாள் மற்றும் அம்மனை தரிசிப்பதின் வழியே வியாபாரத்தில் தொடர் நஷடம் இருந்தால், வியாபாரம் மேன்மை அடையும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. மேலும் பல வருட திருமண தடை நீங்கும் என்பதும் ஐதீகம். உங்கள் நண்பர்களுக்கு பகிரவும்.
News January 31, 2026
விழுப்புரம் வழியாக பிப்ரவரி மாத சிறப்பு ரயில்கள்

விழுப்புரம் வழியாக ஹசூர் சாகிப்- திருச்சி – ஹசூர் சாகிப் பிப்ரவரி மாத சிறப்பு ரயில். வண்டி எண்: 07615 / 07616. இது பிப்ரவரி மாதத்தில் செவ்வாய் & புதன் கிழமையில் இயங்கும். இது திருச்சி விழுப்புரம் திருக்கோவிலூர் திருப்பதி நெல்லூர் ஓங்கோல் தெனாலி குண்டூர் வழியாக சார்லபள்ளி, ஹசூர் சாகிப் செல்கிறது. மறு மார்கத்தில் இதே வழியில் வரும். இதற்கான முன்பதிவு இன்று (31.01.26) காலை 8 மணி முதல் தொடங்குகிறது.


