News December 14, 2025
விழுப்புரம்: அரசு நிலத்திற்கு இரு தரப்பினர் மோதல்!

கீழ்நெமிலியை சேர்ந்த பாஸ்கர், மூர்த்தி என்பவரிடம் விவசாய நிலத்தை வாங்கியுள்ளார். அப்போது, அருகே இருந்த அரசு நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாம், ஆனால் தங்களுக்கு வழிப்பாதை விட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார் மூர்த்தி. ஆனால், பாஸ்கர் அந்த நிலத்தில் பயிரிட்டதுடன், வழி விட மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் இருதரப்பினரும் கற்களால் தாக்கிக்கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 15, 2025
விழுப்புரம்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு கீழ் இருக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
News December 15, 2025
விழுப்புரம் : வாக்காளர் அட்டை உள்ளதா? உடனே இத பண்ணுங்க

விழுப்புரம் மக்களே, 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், தந்தை பெயர், வயது, பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள நீங்கள் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம். இந்த <
News December 15, 2025
விழுப்புரம்: 800 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே வலையம்பட்டு கிராமத்தில் சுமார் 5 அடி உயரமுள்ள, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து அரிய நடராஜர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்த சிற்பத்தை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் எஸ். ராஜகோபால் உறுதிப்படுத்தியுள்ளார். நடராஜருக்கு எதிரே நந்தி சிற்பமும், அருகில் சப்தமாதர்களில் நான்கு சிற்பங்களும் காணப்படுகின்றன.


