News December 27, 2025
விழுப்புரத்தில் 587 பேர் பலி!

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் இதுவரை, மொத்தம் 2,732 சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதில், 587 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 3,183 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சற்று குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026ல் வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை தவிர்க்க மாவட்ட காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News December 27, 2025
விழுப்புரம்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News December 27, 2025
புதிய பேருந்து நிலையத்தில் பெயர் பலகை பொருத்தும் பணி

திண்டிவனம் நகராட்சியின் புதிய அதிநவீன பேருந்து நிலையத்தில் இறுதிக்கட்டமாக “முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்” பெயர் பலகை பொறுத்தும் பணி இன்று டிச. 27 நடைபெற்று வருகிறது. இதனை திண்டிவனம் நகர தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் பார்வையிட்டார். உடன், நகர மன்ற உறுப்பினர் உறுப்பினர் ஆர்.ஆர். எஸ்.ரவிச்சந்திரன் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஆகியோர் இருந்தனர்.
News December 27, 2025
விழுப்புரம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


